தமிழ் சினிமாவில் 50க்கு மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் சுமதி. வடிவேலுவுடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.இந்த நிலையில் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது,
இவருக்கு, 16 வயதிலேயே அவருடைய மாமாவையே திருமணம் செய்து வைத்துள்ளனர் பெற்றோர். திருமணத்திற்கு பின்னர் எந்நேரமும், குடியிலேயே இருந்த அவர், மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னரும், அடித்து கொடுமை படுத்தியுள்ளார். பின்னர் உறவினர் ஒருவருடன் சுமதியை தவறாக இணைத்து வைத்து பேசியுள்ளார்.
ஒரு கட்டத்தில், கணவர் யாருடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறினாரோ... அவரிடம் சென்று, என்னை கண்காணாத இடத்திற்கு கூட்டிட்டு போய்விடு, என சுமதி கண்ணீர் விட, அவரும்... சுமதி மற்றும் அவரின் மூன்று பிள்ளைகளுடன் சென்னைக்கு வந்துள்ளார். அங்கு வீடு இருந்து இரண்டாவது கணவருடன் தன்னுடைய வாழ்க்கையை சுமதி துவங்கினார்.
பின்னர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மூலம் சினிமாவில் துணைநடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தததால், பின்னர் முழுமையாக திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார்.
இவரின் பிள்ளைகள் இளம் வயதை அடைந்த பின்னர், சுமதியை விட்டு பிரிந்து சொந்த ஊருக்கு சென்றதோடு மட்டுமன்றி பெத்த தாய் என்று நினைத்து ஒரு போன் கூட செய்து என்னை விசாரிக்க மாட்டார்கள். நான் ஏதாவது சம்பாதித்து கொடுத்தால் மட்டும் வாங்கி கொள்வார்கள் என எமோஷனலாக பேசியுள்ளார்.
மேலும் தன்னுடைய இரண்டாவது கணவர் தான் என்னை இப்போது வரை நன்றாக பார்த்து கொள்வதாகவும் கூறியுள்ளார். சமீப காலமாக பட வாய்ப்புகள் தனக்கு அதிகம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ள சுமதி, கொரோனா காலத்தில் யோகி பாபு, சூரி, நடிகர் நரேன் ஆகியோர் தனக்கு பணம் கொடுத்து உதவியதாகவும், அதே போல் யோகி பாபு எப்போதுமே என்னை பார்த்தல் பணம் கொடுத்து உதவுவார் என கூறியுள்ளார்.
Listen News!