ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா, நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.
இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. இதனிடையே கடந்த வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.
அத்தோடு வெளியே சென்றிந்த ADK முன்னதாக தனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் பயணம் குறித்து மனம் திறந்திருக்கிறார் ADK. இது தொடர்பாக நேரலையில் ADK-விடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, "உங்களுக்கு பிடித்த பிக்பாஸ் போட்டியாளர்கள் யார்?" என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ADK,"விக்ரமன், அசீம், ராம் மற்றும் மணி" ஆகியோர் தனது விருப்பத்திற்கு உரிய போட்டியாளர்கள் என குறிப்பிடுகிறார்.
பிக்பாஸ் போட்டி குறித்த அழைப்பு வந்தபோது தனக்கு இன்ப அதிர்ச்சி போல இருந்ததாகவும் தனது திறமையை வெளிப்படுத்த இந்த போட்டி உதவியதாகவும் கூறியுள்ளார் ADK. இதுபற்றி அவர் பேசுகையில்,"பிக்பாஸ் பயணம் என்னை பொறுத்தவரை அது நான் எதிர்பார்க்காத ஒன்னு. அத்தோடு எனக்கு நம்பிக்கையே இல்ல. ஆனா பேராசை இருந்துச்சு. உள்ளே போன அப்புறம் என்னோட, திறமையை வெளிப்படுத்துற வெளிப்படுத்தக்கூடிய இடமா பிக்பாஸ் இருந்துச்சு. அது மகிழ்ச்சி தான்" என்கிறார்.
Listen News!