பாவ்லன் ஜெசிகா தமிழ்த் திரையுலகில் தனது பணிகளுக்காக அறியப்பட்ட ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். பாவ்லனின் குறிப்பிடத்தக்க திட்டங்களில் வாய்தா அடங்கும்.காதல் தோல்வி காரணமாக நேற்றைய தினம் சென்னையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவர் இறப்பதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார் அதுமட்டுமல்லாது நடிகை ஜெசிகா இயக்குனர் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் விதார்த் .மதன், தன்சிக ஆகியோருடன்நடிக்க இருந்தார். அதுமட்டுமல்லாது இப்படத்தில் நடிப்பதற்கு தனக்கு வாய்ப்பை வழங்கிய இயக்குனருக்கு நன்றியையும் தெரிவித்து இருந்தார் .
துப்பறிவாளன் படத்தில் இவரை இயக்குனர் மிஸ்கின் அறிமுகம் செய்து வைத்திருந்தார். இத் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த சந்தர்ப்பத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்த நடிகை மிஷ்கினுக்கு தனது நன்றியை தெரிவித்திருந்தார் இந்நிலையில் இவரது மர்ம மரணம் குறித்து திரையுலகத்தினர் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்
Listen News!