• Sep 20 2024

என்னுடைய கதையை திருடி தான் படம் எடுத்தார்கள் - கடைசி நேரத்தில் மோசமான சர்ச்சையில் சிக்கியுள்ள விருமன் திரைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பருத்திவீரன் என்ற கிராமத்துக் கதைக் களம் கொண்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய கார்த்தி இதனைத் தொடர்ந்து கொம்பன் போன்ற இன்னும் சில கிராமத்துப் பின்னணிப் படங்களில் நடித்திருந்தார்.கொம்பன் படம் கார்த்தியின் கெரியரில் முக்கியமான படமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முத்தையாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்த கார்த்தி விருமன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.இப்படம் மூலம் அவர் ஹீரோயினாகவும் அறிமுகமாகி உள்ளார்.

சூரி, ஆர்.கே.சுரேஷ், பிகில் பாண்டியம்மாள், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் இப்படம் புதிய சிக்கலில் சிக்கியுள்ளது. அதாவது இணை இயக்குநர் ஒருவர் விருமன் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனை இயக்குநர் முத்தையா திருடி படமாக எடுத்துள்ளதாகவும் எழுத்தாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சமாதான பேச்சும் நடைபெற்று வருகிறதாம். கடைசி நேரத்தில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதால் விருமன் படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கார்த்தி - முத்தையா கூட்டணியில் வெளியான கொம்பன் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement