சூர்யா - ஜோதிகா நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய இயக்குநர் ஒப்பிலி கிருஷ்ணன் இயக்கத்தில், சிம்பு நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆகிக்கொண்டே சென்றது.
இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் 'பத்து தல' படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது.
இதில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். மேலும் சிம்பு அதிரடி தாதா வேடத்தில் நடித்துள்ள இப்படம், மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் கூட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று பத்து தல படத்தின் ப்ரஸ்மீட் நடைபெற்று வருகின்றது. அதில் சிம்புவும் கலந்து கொண்டதோடு இசை வெளியீட்டு விழாவில் கௌதம் சேரைப் பற்றி சொல்ல மறந்திட்டேன். இந்த படத்தில அவரும் நடிச்சிருக்காரு. அவர் இப்போ தொடர்ந்து படங்களில் பிஸியக நடித்துக் கொண்டே வருவதால விண்ணைத் தாண்டி வருவாயோ 2 திரைப்படத்தை எடுப்பாரோ என்று தெரியல என்று கூறினார். தொடர்ந்து இன்னும் சில பிரபலங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!