16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தவர் தான் நடிகை ரெஜினா. இப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தமாயால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதாவது 'அழகிய அசுரா, சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம்' போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் போன்ற படங்களிலும் ஆர்வம் காட்ட வெளிக்கிட்டார். தற்போது நிவேதா தாமஸ் உடன் இணைந்து இவர் சாகினி தாகினி என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்தபடம் நாளை(செப்டம்பர்.16) வெளியாக உள்ளது. இதற்காக பட ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டார் ரெஜினா. சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆண்களையும், நூடுல்ஸ் குறித்து இரட்டை அர்த்த காமெடி வசனம் பேசி சர்ச்சையிலும் சிக்கி இருந்தார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் தனது லிப் லொக் முத்தம் அனுபவம் குறித்து பேசியுள்ளார் ரெஜினா. அவர் கூறுகையில், ‛‛ஒரு சமயம் ஒரு பெண் திடீரென எனது உதட்டில் முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தேன். பெண் என்பதால் நான் அவரை தள்ளிவிடவில்லை. ஒருவேளை ஆணாக இருந்திருந்தால் கண்டிப்பாக அறைந்திருப்பேன்'' என்று கூறியுள்ளார்.
Listen News!