• Sep 20 2024

உதவியாளர்களுக்கு தங்க காசு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த திமிரு பட நடிகை..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் சலார் படத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சலார். யாஷ் நடித்த கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். 

மேலும் மலையாள நடிகர் பிரித்விராஜும் சலார் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சலார் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர உள்ளனர். இப்படத்தை நடிகர் பிரபாஸ் மலைபோல் நம்பி உள்ளார். ஏனெனில் பாகுபலி 2 படத்திற்கு பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்தன. அவர் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்கில் ஓடி வந்தாலும், அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதளபாதாளத்திற்கு சென்று வருவதால் அப்படமும் பிளாப் ஆகிவிடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சலார் திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் இவ்வளவு நாள் சீக்ரெட் ஆக வைக்கப்பட்டு இருந்ததால், திமிரு படத்தைப் போல் இதிலும் மாஸ் ஆன வில்லி கேரக்டராக இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். சலார் படத்தில் அவர் நடித்துள்ள காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஷூட்டிங் நிறைவடைந்ததும், தன்னுடைய உதவியாளர்களுக்கு நடிகை ஸ்ரேயா ரெட்டி, தங்க நாணயம் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகை ஸ்ரேயா ரெட்டியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement