தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில, இவர்கள் திருமணம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தின் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது.
இதில் கீர்த்தி பாண்டியன் நிறம் குறித்து சிலர் மோசமான கமெண்ட்ஸ் பதிவு செய்திருந்தனர்.ஆனால், பலரும் கீர்த்தி பாண்டியனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்தனர். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் ஐ.பி.சி சேனலுக்கு அசோக் செல்வன் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில், 'வெள்ளையாக இருந்தால் அழகு, கருப்பு இருந்தால் அழகு இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. வெள்ளை என்பது ஒரு நிறம் தான் அழகு இல்லை. இது மிகவும் தவறான பார்வை' என பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!