மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு, குல தெய்வம் போன்ற நல்ல வரவேற்பு பெற்ற தொடர்களை இயக்கிய திருமுருகன் தற்போது ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
மேலும் அவரது சீரியல்கள் அனைத்தும் சன் டிவியில் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது திருமுருகன் அதே சேனலுக்காக ஒரு புது சீரியல் எடுக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
அத்தோடு அந்த சீரியலுக்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். மேலும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நடிக்க ஆர்வம் இருப்பவர்கள் அணுகவும் விளம்பரம் கொடுத்து இருக்கின்றனர்.
விரைவில் இந்த சீரியலை சன் டிவியில் பார்க்கலாம் என்பதால் திருமுருகன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
Listen News!