• Sep 20 2024

விமலுக்கு சினிமா வாய்ப்பை பெற்றுக் கொடுத்ததே இந்த நடிகர் தானாம்... இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனுஷனா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விமல். இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படமானது பல விருதுகளை வாரிக் குவித்திருந்தது.


அதனைத் தொடர்ந்து பல படங்களிலும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நடிகர் விமல் சினிமாவிற்குள் எப்படி வந்தார், யார் அந்த வாய்ப்பினை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது என்பது குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. 


அதாவது விமல், விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றிருந்த காலகட்டத்தில், அவ்வபோது பல கம்பெனிகளை தேடி அலைவதும் அவர்கள் வைக்கும் ஆடிஷனில் கலந்து கொள்வதும் பல காலமாக வழக்கமாக இருந்திருக்கிறது. 


அப்படி ஒரு நாள் விஜய் சேதுபதி 'பசங்க' திரைப்படத்தின் ஆடிஷன் நடந்து கொண்டிருந்ததை அறிந்து அதில் தானும் கலந்து கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் உடைய இயக்குநர் ஒரு சில அங்க அடையாளங்களை சொல்லி "இந்த மாதிரி கேரக்டர் உள்ளவரை தான் நாங்கள் நடிக்க வைப்பதாக உள்ளோம்" என்று சொல்லி இருக்கிறார்.

இதனைக் கேட்டதும் உடனே விஜய் சேதுபதி, விமலை தொலைபேசியில் அழைத்து "இயக்குநர் சொல்வதை பார்த்தால் உன்னை மாதிரி ஒரு நடிகரை தான் தேடுவது போல் தெரிகிறது, நீ போய் அந்த ஆடிஷனில் கலந்துக்கொள் கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறியிருக்கிறார்.


அந்தவகையில் விமல் ஆடிஷனில் கலந்து கொண்ட போது மீசை, தாடி எல்லாம் சேவிங் செய்து இருந்ததை, பார்த்த இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் கேமராமேன் பிரேம் ஆகியோர் "இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மீசை, தாடியுடன் இருக்கிற ஒரு நபர் தான் தேவை" என்று கூறியுள்ளனர். பின்பு கேமராமேன் பிரேமிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் மீசை தாடியுடன் நடித்த பிங்கோ விளம்பரத்தை காட்டி இருக்கிறார். 

அதனை அவர்கள் இயக்குநரிடம் காண்பித்த போது ஒரு 10, 15 நாட்கள் கழித்து மீசை, தாடி வளர்த்த பின்பு விமலை வர சொல்லி இருக்கிறார். ஒரு 15 நாட்கள் கழித்து மீண்டும் அந்த இயக்குநரை சந்தித்தபோது ஒரு சில வசனங்களை விமலிடம் கொடுத்து பேச சொல்லி இருக்கிறார்.


விமல் பேசியதை பார்த்த இயக்குநர் உடனே "சரி ஓகே நீங்க தான் இந்த படத்தில் ஹீரோ" என்று சொல்லி இருக்கின்றார். மேலும் தயாரிப்பாளர் சசிகுமாருக்கும் பிடித்து போய், விமலுக்கு எதிர்பாராத நேரத்தில் திடீரென்று சசிகுமார் 10 ஆயிரம் செக் கொடுத்திருக்கிறார். 

அதனைத் தொடர்ந்து அப்படத்தில் விமலே ஹீரோவாக நடித்து அசத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்த விஜய் சேதுபதியை இன்றுவரை விமல் நினைவுகூர்ந்த வண்ணம் தான இருக்கின்றார்.

Advertisement

Advertisement