பல ஹிட் சீரியல்களை ரசிகர்களுக்கு கொடுத்த சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றன. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'பாரதி கண்ணம்மா'.
இந்த சீரியலில் முதன் முதலில் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தவர் நடிகை ரோஷினி. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்த சீரியலிலிருந்து விலகி விட்டார்.
இதன்பின்னர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் நடிக்க வந்தார். முதல் சில வாரங்களில் மக்கள் மனதை கவர்ந்திருந்தாலும் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் கண்ணம்மாவாக மக்கள் பலரில் மனதை வினுஷா தேவி இடம்பிடித்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இந்த சீரியலில் கண்ணம்மாவாக முதன் முதலில் நடிக்கவிருந்தது ரோஷினி கிடையாதாம். நடிகை அஸ்வினி தானாம். அந்தவகையில் அஸ்வினி தான் முதன் முதலில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்க ஆடிஷனுக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் அந்த ஆடிஷனின் தேர்வாகவில்லை என அவரே கூறியுள்ளார்.
மேலும் நடிகை அஸ்வினி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!