விஜய் டிவியின் மூலம் பிரபல்யமாகி வெள்ளித்திரையில் கால் பதித்து முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் பிரபலங்கள் பலர் காணப்படுகின்றனர்.இவர்களில் விஜய் டிவியில் தற்பொழுது முக்கிய பிரபலமாக வலம் வருபவர் தான் பாலா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் மட்டுமல்ல பிரபலங்களின் மனதிலும் இடம்பிடித்தார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கின்றார்.
இது தவிர காமெடி ராஜா கலக்கல் ராணி, குக்வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்காற்றி இருப்பதோடு சில ஷோக்களில் கெஸ்ட் ரோலில் நடித்தும் வருகின்றார்.இவரத காமெடி அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்புப் பெற்று வருகின்றன.தொடர்ந்தும் இவர் படங்களில் நடிப்பார் என்றும் நம்பப்படுகின்றது.
நடிப்பையும் தாண்டி படிக்கும் மாணவர்கள் மற்றும் முதியோர்இல்லங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களில் இருப்பவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார்.இந்த நிலையில் அண்மையில் பிரபல பேட்டி ஒன்றில் பங்கற்று இருந்தார்.அப்போது இவருடைய பாஃன்ஸ் என்ற பெயரில் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களைப் பார்த்ததும் கண்கலங்கி நின்றார்.
தொடர்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய குரேஷி நீங்க எப்படி மற்றவங்களுக்கு உதவி செய்யோனும் என்று முடிவெடுத்தீங்க என்று பாலாவிடம் கேட்டார். அதற்கு ஒரு நாள் ஒரு பொண்ணு வந்து எக்ஸாமுக்கு பீஸ் கட்டணும் என்று சொல்லிச்சு அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சு அப்படியே இப்போ கருணை இல்லம் முதியோர் இல்லம் வரை பண்ணிட்டு இருக்கிறேன். இதை ஒரு ஜாலியாத் தான் பண்ணிட்டு இருக்கின்றேன் என்றார்.
இதன் பின்னர் அங்கு வந்திருந்த ஒரு பாட்டி தனது கதையை சொல்லி அழுதார். அதாவது தன்னுடைய பிள்ளையும் கணவரும் இறந்து விட்டதாகவும் தான் தனிமையில் இருப்பதாகவும் என்று கூற பாலா கவலைப்படாதீங்க பாட்டி நான் இருக்கிறேன் என்று கூறி சமாதானப்படுத்தியதோடு அனைவருக்கும் உணவு பரிமாறி அவர்களை சாப்பிட வைத்தார்.இதனால் இந்த வீடியோவைப் பார்த்த பலரும பாலாவைப் பாராட்டி வருவதோடு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!