தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் கௌதம் கார்த்தியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
அந்தவகையில், பத்துதல திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டி உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து நடிகர் கூல் சுரேஷ் சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளார். தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் கூல் சுரேஷ் செல்பி எடுத்துக்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கூல் சுரேஷ், “பத்து தல திரைப்படம் வெற்றி பெற வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினோம். திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும், STR இன் பத்துதல..! சிம்பு ரசிகர்கள் கெத்து தல..! என்று அவர் சொன்னதும் அங்கிருந்த சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கூல் சுரேஷ், “பத்து தல திரைப்படம் வெற்றி பெற வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினோம். திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும், STR இன் பத்துதல..! சிம்பு ரசிகர்கள் கெத்து தல..! என்று அவர் சொன்னதும் அங்கிருந்த சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
இதன்பின் நடிகர் சிம்புவிற்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு பதிலளித்த கூல் சுரேஷ், நடிகர் சிம்புவிற்கு திருமணம் என ஒன்று நடந்தால் பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் முன்னிலையில் தான் நடக்கும். அப்படியாகவே டி. ராஜேந்திரன் சிம்புவை பொறுப்புடன் வளர்த்துள்ளார். விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!