• Sep 20 2024

இதிலேயே உங்கள் ரியல் குணம் தெரிந்து விட்டது- நாகசைத்தன்யாவைப் பாராட்டி சமந்தாவை விளாசும் நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவில் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நடிகை சமந்தா.இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இது தவிர வெப் சீரியல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

மேலும் இவர் சோலோ ஹீரோயினாக யசோதா சகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.தென்னிந்திய அளவில் பிரபல்யமானவராகக் கருதப்படும் இவர் தெலுங்கு நடிகரான நாகசைத்தன்யாவைத் திருமணம் செய்திருந்தார்.

மூன்று வருடங்கள் உன்றாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவரும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் சமந்தா.விவாகரத்து குறித்து போட்ட போஸ்ட்டையும் நீக்கினார்.அவை எல்லாம் இனி தேவை இல்லை என்றார்.

ஆனால் சமந்தாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யா நீக்கவில்லை. அந்த புகைப்படங்கள் அப்படியே இருப்பதை பார்த்த ரசிகர்களோ, இது தான் உண்மையான காதல், அன்பு. அது என்றும் மாறாது. புகைப்படங்களை நீக்காமல் இருப்பதன் மூலம் உங்களின் குணம் தெரிகிறது என்று நாக சைதன்யாவை பாராட்டுகிறார்கள்.

நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக அண்மையில் வதந்தி கிளம்பியது. அதை கிளப்பிவிட்டதே சமந்தா தான் என்று கூறி நாக சைதன்யாவின் ரசிகர்கள் அவரை விளாசினார்கள். அந்த வதந்திக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்றார் சமந்தா.இந்நிலையில் சமந்தா இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கம் வருவதை நிறுத்திவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement