தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.தற்போது சீசன்6 இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது .இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்தவர் தான் ஜனனி.
இவர்கள் இருவரில் இறுதி வாரம் வரை பிக்பாஸ் வீட்டில் பயணிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் ஆரம்பம் முதலே தனது புன்சிரிப்பு மற்றும் இலங்கை தமிழ் பேச்சாலும் பல இலட்சக்கணக்கானோரை தன்வசப்படுத்திய ஜனனி, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
இவ்வாறான நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜனனி தொடர்ந்தும் இந்தியாவிலேயே தங்கி வருகின்றார். இடையிடையே போட்டோசூட்களை நடாத்தி அதனை தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது தைப்பொங்கல் ஸ்பெஷலாக போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!