• Sep 20 2024

கமல் சாரின் கனவு இது - இதை நான் செய்திருக்கிறேன் என நினைக்கும் போது பயமாக இருக்கிறது- மேடையில் நெகிழ்ந்த கார்த்தி

stella / 2 years ago

Advertisement

Listen News!


மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் ,இயக்குநர் மணிரத்னம்.இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். 

 இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. அந்த வகையில் இந்தப் படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவானது நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.


அந்த வகையில் இந்த படத்தில் நடித்த கார்த்தி தான் நடித்துள்ள வந்தியத் தேவன் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார்.அதில் “இந்த படத்தை 1989 ல் கமல் சார் எடுக்க நினைத்தார். அப்போது அவர் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில்தான் நடிக்க ஆசைப்பட்டார். அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்த படம் 70 வருட தமிழ் சினிமாவின் கனவு. இந்த தலைமுறையில் பிறந்ததற்காக சந்தோஷப் படுகிறேன்” என தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.


மேலும் தொடர்ந்து, விக்ரம் பற்றி பேசிய கார்த்தி, "நிறைய முறை அவரை பார்த்து ரசித்து இருக்கிறேன். அவரை அருகில் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி. அவர் கண் கொண்டு நடிக்கும் போது, நம்மை மெய் மறக்க வைக்கும்" என்றார். இறுதியில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசிய கார்த்தி, "நீங்கள் பொன்னியின் செல்வன் கதையை நிறைய இடத்தில் பேசியது மிகவும் இன்ஸ்பயரிங்காக இருந்தது. மிக்க நன்றி சார்" என்றார்.


Advertisement

Advertisement