தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பவன் கல்யாண். இவர் நடிப்பில் மட்டுமன்றி தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் இவர் ஜனசேனா என்கிற கட்சியை நடத்தி வருவதோடு அக்கட்சியின் தலைவராகவும் இவரே இருந்து வருகிறார்.
தெலுங்கு சினிமாவைப் பொறுத்தவரையில் பொதுவாக படங்களில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் பெரும்பாலும் சுமாராகத்தான் இருக்கும். இதனால் ரசிகர்கள் பலரும் அதனை ட்ரோல் செய்து ஏராளமான மீம்ஸ்களும் போடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நடிகர் பவன் கல்யாண், காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் படு வைரலாகி வந்தது. அது ஏதோ அவரின் படத்தின் உடைய ஷூட்டிங் என நினைத்து அந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர்.
ஆனால் உண்மை என்னவெனில் அது ஷூட்டிங் வீடியோ இல்லையாம், நிஜமாகவே அவ்வாறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளார் பவன் கல்யாண். அதாவது ஆந்திர மாநிலத்தில் உள்ள இப்டம் எனும் கிராமத்தில் உள்ள வீடுகள் சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்டன. இதில் வீடுகளை இழந்த அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகத் தான் அவ்வாறு காரில் சென்றுள்ளார் பவன் கல்யாண்.
அதுமட்டுமல்லாது அவ்வாறு வந்த பவன் கல்யாணின் செயற்பாடுகளை பார்த்த போலீஸார் அவரைத் தடுத்துள்ளனர். இதனை அறிந்த நெட்டிசன்கள் பலரும் கோபத்தில் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
அரசியலில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவனே இதுபோன்று சாலை விதிகளை மீறலாமா என தாறுமாறாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாது ஒரு சிலரோ ‘இப்படி போய் ஆறுதல் கூறுவதற்கு பதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டியது தானே’ என அவருக்கு அறிவுரைகளை அல்லி வீசி வருகின்றனர்.
Listen News!