விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்தபோது காதலர்களாக மாறியவர்கள் தான் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா.இவர்கள் கடந்த மார்ச் மாதம் இந்த ஜோடிக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமான இரண்டே மாதத்தில் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இருவருமே நீக்கினர்.
இதனால் இவர் இருவரும் பிரிந்துவிட்டார்களா என்கிற ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தாங்கள் பிரிந்துவிட்டதை தனித்தனியாக அறிவித்ததோடு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
சம்யுக்தாவின் தந்தை அடிக்கடி வீட்டுக்கு வருவதால் தான் தங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக விஷ்ணுகாந்த் கூறினார்.இப்படியான நிலையில் சம்யுக்தா தன்னுடைய அப்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து அப்பாவினுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக எனது ஹிட்லருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நான் ஏன் என் தந்தையை ஹிட்லர் என்று அழைக்கிறேன் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆம்! நான் அவருடைய ஜெர்மனி என்பதால் அவர் எனது ஹிட்லர்!
இதுவரை நான் என் தந்தை யார் என்பதை வெளிப்படுத்தவில்லை, அவரைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. காரணம் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நான் நம்புகிறேன். ஆனால் இப்போது யாருக்கும் தெரியாத ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
அவர் என் இதயத்திற்கு சொந்தமான மனிதர். அவர் என் பலம், என் ஆதரவு, என் சக்தி, என் நம்பிக்கை, என் அன்பு, என் எல்லாம்.....
அன்புள்ள DADA;
உங்களின் அனைத்து ஞான வார்த்தைகளுக்கும் நன்றி.
எல்லா நேரங்களிலும் நீ என்னுடன் நின்றாய்
எப்பொழுதும் என் வாழ்வின் கவசம்.
உங்களைப் போன்ற தந்தையைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி. தாதா உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
சில மாதிரிகளுக்கு ஒரு முக்கிய குறிப்பு: நான் என் தந்தையுடன் எவ்வளவு வேண்டுமானாலும் சண்டையிட முடியும். அது எனது உரிமை & அது எங்கள் தனிப்பட்ட உரிமையும் கூட. ஆனால் நீங்கள் என் தந்தையிடம் தவறாக பேசினாலோ அல்லது நடந்து கொண்டாலோ நான் வாயை மூடிக்கொண்டு இருக்க மாட்டேன். இதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!