'ரோஜா' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு 'அந்தரி பந்துவயா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை
இதனை அடுத்து தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, காஞ்சனா 3, போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காத காரணத்தினால் தான் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.
அதன்படி சன் டிவியில் இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து ஷீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சீதா ராமன்' என்கிற சீரியலில் நடித்து வருகிறார்.
இவர் அண்மையில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அதாவது இவருடைய கணவர் மலேசியாவில் இருப்பதாகவும் அவரே சீரியலில் இருந்து விலக சொன்ன காரணத்தினாலும் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியிருந்தது. இப்படியான நிலையில் ப்ரியங்கா இந்த சீரியலில் இறுதியாக கலந்து கொண்ட போட்டோவைப் பதிவிட்டு சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் தமது கவலையைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!