தமிழில் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'கிடா பூசாரி மகுடி' படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நட்சத்திரா குட்டிசேரி.
இவர் நடித்த இந்த படம், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனால் சில காலம் திரையுலகில் இருந்து விலகியே இருந்தார். இதன் பின் ஜீதமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' என்ற சீரியலில் நடித்து ரசிகர்களிடத்தே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்த சீரியல் மூலம், வெள்ளித்திரை மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியாவிட்டாலும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இவரது தோழியும் சீரியல் நடிகையுமான ஸ்ரீநிதி கூறிய தகவல் ரசிகர்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.அதாவது நட்சத்திரா விவாகரத்துப் பெற்ற ஒருவரைக் காதலிப்பதாகவும் அந்த நபர் மோசமானவர் என்றும் கூறியிருந்தார்.
இவ்வாறு இருக்கையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் முகமாக ஸ்ரீநிதியின் தாய் அவ்வாறு இல்லை.அந்த பையன் நல்லவர் தான் அவரைத் தான் திருமணம் செய்யப்போகிறார் நட்சத்திரா.ஸ்ரீநிதி தனது தோழியான நட்சத்திரா மீது இருக்கும் அளவு கடந்த அன்பினாலே அப்படி பேசினார் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் நட்சத்திரா திருமணம் செய்ப்போகிறவர் ஒரு நடிகரும் இயக்குநரும் ஆவாராம்.அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!