இந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான அமீர்கானின் 'சர்ஃப்ரோஷ்' என்ற படத்தில் தீவிரவாதியாக ஒரு சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். இதன் பின்னர் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த அவர், தனது விடா முயற்சியாலும் திறமையான நடிப்பாலும் இன்று பாலிவுட்டின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இவர் பல மொழி படங்களில் நடித்திருந்தாலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலமாகத் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தன்னுடைய சிறந்த நடிப்பாற்றலால் பல ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர் நவாசுதீன் சித்திக், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.
அதாவது இவரின் மனைவி ஆலியா சித்திக்கும் நவாசுதீனுக்கும் மற்றும் இவரின் தாயாருக்கும் சமீபகாலமாக பல பிரச்சினைகள், வாக்குவாதங்கள் இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் ஆலியா சித்திக்கும் நவாசுதீனுக்கும் பிறந்த சொந்த மகனை அவர் தற்போது ஏற்க மறுப்பதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது.
இதன் காரணமாக தன்னுடைய மகன் தனக்குத் தான் பிறந்துள்ளாரா என்பதை அறிந்து கொள்வதற்காக மரபணு சோதனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு அவரின் மனைவி ஆலியா பதிலளிக்கையில் "இந்த பிரச்சனை முடிந்தவுடன் நான் நவாசுதீன் சித்திக்கை விவாகரத்து செய்ய போகிறேன்" என்று கூறி உள்ளார்.
நடிகர் நவாசுதீன் சித்திக் நடந்து கொள்ளுகின்ற இந்த விதமானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!