விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் இருக்கின்றது.
கோபியையும் கூட்டிக் கொண்ட வந்து பாக்கியா வீட்டில் இருக்கின்றார்.ராதிகா இங்கு இருப்பதோடு மட்டுமல்லாது அடிக்கடி வீட்டில் உள்ளவர்களுடன் குறிப்பாக ஈஸ்வரியுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.
இவர்கள் சண்டையால் கோபி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றார். இப்படியான நிலையில் இன்றைக்கு வெளியாகிய ப்ரோமோவில் போன் பார்த்துக்கொண்டு வரும் ஜெனி திடீரென வழுக்கி விழுகின்றார்.உடனே பதறியடித்து ராதிகா எழுப்பி விடுகின்றார்.ஜெனியோ அழ ஒண்ணுக்கும் பயப்படாதே என ஆறுதல் கூறி ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வருகின்றார்.
உடனே அவருக்கு ரீட்மன்ட் போன பாக்கியாவிற்கு போன் பண்ணி நடந்த விடயத்தை கூறுகின்றார்.இதைக் கேட்டு பாக்கிய அதிர்ச்சியடைகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க ஜெனி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா மாடர்ன் உடையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் மட்டும் தான் இவ்வளவு அடக்க ஒடுக்கமாக இருப்பீங்களா என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!