பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட பிக் பாஸ் வீட்டில் இப்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே டைட்டில் ரேஸில் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் யார் எவிக்சன், யார் பெட்டியோடு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்த வாரம் எவிக்சன் நாமினேஷன் முடிந்ததும் அமீர், சுரேஷ் சக்கரவர்த்தி, விஜே பார்வதி, விஜே ஷோபனா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றனர். அதன்பின்னர் இந்த சீசனில் எவிக்சனான ராபர்ட் மாஸ்டர், அசல் கோளாறு, சாந்தி, ஜிபி முத்து தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் ரீ-என்ட்ரீ கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தும் விளையாடியும் வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு, ஆனந்தம் விளையாடும் வீடாக மாறியுள்ளது.
அந்த வகையில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம்.அதாவது முதலில் தனலட்சுமி என்ட்ரி கொடுத்தார். அவரைப் பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். அத்தோடு தனலட்சுமி அனைவருடனும் ஜாலியாக பேசியதோடு விக்ரமனிடம் சில விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து மணிகண்டன் உள்ளே வந்தார்.அவரைப் பார்த்ததும் மைனா அசீம் ஆகியோர் வேற லெவல் குஷியில் இருந்தனர்.தொடர்ந்து ஷிவின் பிக்பாஸாக இருந்து ஒரு டாஸ்க் கொடுத்தார். அதாவது புதிதாக வந்தவர்கள் அனைவரும் குழந்தை போல மாற வேண்டும் என்று எல்லோரும் அதனை சிறப்பாக செய்தனர்.
தொடர்ந்து கதிருக்கு பிக் பாஸ் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பிக் பாஸ் சீட்டில் அமர்ந்து ஹவுஸ்ட்மேட்ஸ்களிடம் கேள்வி கேட்கிறார். அதில், யார் இந்த வீட்டின் பெஸ்ட் என ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆர்டர் போடுகிறார். முதலில் வரும் ஏடிகே, மைனாவை பெஸ்ட் என கூறுகிறார். எப்போதும் Positive Human Being உடன் ஒருவரை பார்ப்பது ரொம்ப கஷ்டம் என விளக்கம் கொடுக்கிறார்.
அதன்பின்னர் வரும் விக்ரமன், அசீம் தான் பெஸ்ட் என கூறுகிறார். சில நேரங்களில் அவர் காட்டக் கூடிய அன்பு, அவருடைய பேச்சுத் திறமை, எந்த இடத்திலும் சோர்ந்துவிடாமல் 14 வாரங்களும் கடுமையான விமர்சனங்களை அவர் கடந்து வந்துள்ளார். இதற்கு ஒரு பெரிய துணிச்சல் வேண்டும் என விளக்கம் அளிக்கிறார். அடுத்து வரும் அசீமும் விக்ரமனை தான் பெஸ்ட் என்கிறார். கோபம் எந்தவிதத்துலயும் பாதித்திடக் கூடாதுங்குற மிகப் பெரிய உதாரணமா நான் பாக்குறேன் என விளக்கமளிக்கிறார். இவ்வாறு ஒவ்வொருத்தரும் கூறுகின்றனர். தொடர்ந்து குயின்சி மற்றும் நிவாஷினி ஆகியோர் என்ட்ரி கொடுத்ததோடு பிக்பாஸ் வீடே மகிழ்ச்சியில் காணப்பட்டது.
Listen News!