கோலிவுட் திரையுலகில் எப்படி விஜய் - அஜித் இருக்கிறார்களோ, அதே போல் நடிகர் மகேஷ் பாபுவுக்கு தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் இவரை சகோதரர் நரேஷ் பாபு, தன்னுடைய 60 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டது தெலுங்கு திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த திருமணத்தில் மகேஷ் பாபு கலந்து கொண்டாரா? இல்லையா என்கிற விவாதமும் எழுந்தது.
தன்னுடைய சகோதரர் நரேஷ் சில சர்ச்சைகளில் சிக்கினாலும், தி பர்பெக்ட் என்று கூறும் அளவிற்கு... எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்து வருபவர் மகேஷ் பாபு.
இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த நடிகை நம்ருதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு, கெளதம் என்கிற மகனும், சித்தாரா என்கிற மகளும் உள்ளனர்.
பொதுவாக திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதுண்டு.அந்த வகையில் தற்பொழுது மகேஷ்பாபுவின் சிறுவயதுப் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.மகேஷ் பாபு நடிப்பில் அடுத்ததாக Guntur Kaaram என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!