• Sep 20 2024

இதில் எந்தவொரு முன் அனுபவமும் இல்லை இதுவே முதல் முறை- நெகிழ்ந்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஜூலை 28ம் தேதி தொடங்கி விமர்சையாக நடைவெற்ற நிகழ்ச்சி தான் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி. இந்த நிகழ்வில் பல நாடுகளிலும் இருந்து மக்கிய பிரபலங்கள் கலந் து கொண்டனர்.

இந்த நிகழ்வானது ஆகஸ்ட் 8ம் திகதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் போட்டியின் இறுதி நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை இயக்கி நேரடி ஒளிபரப்பு செய்யும் பொறுப்பு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த அனுபவம் குறித்து பேசியுள்ள விக்னேஷ் சிவன் “திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன். ஆனால் நேரடி ஒளிபரப்பு என்பது திரைப்படங்களை விட வித்தியாசமானது. எனக்கு நேரடி ஒளிபரப்பு செய்வதில் முன்கூட்டிய அனுபவங்கள் கிடையாது. இதுவே முதல்முறை. நல்ல டீம் இருந்ததால் சிறப்பாக செயல்பட முடிந்தது” என கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement