• Sep 20 2024

எதிர் நீச்சல் சீரியலில் நடிக்க இது மட்டும் தான் காரணம்- உண்மையை போட்டுடைத்த மாரிமுத்து

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் தற்பொழுது குணசேகரனின் சொத்தை ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றி விட்டார். இதனால் ஜனனி எப்படி சொத்தை மீட்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

மேலும் இந்த சீரியலில் அண்மையில் ஆதிரை-கரிகாலன் கல்யாணம் எதிர்பாராத டுவிஸ்டுகளுடன் நடந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.அத்தோடு அந்த டைம்ல டிஆர்பியிலும் இந்த சீரியல் முன்னணியில் நின்றது.என்பதும் முக்கியமாகும்.


வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் மாரிமுத்து. இவர் அண்மையில் எப்படி இந்த சீரியலில் நடிக்க வந்தார் என்பது குறித்து பேசியுள்ளார். அதாவது சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது, ஆனால் பிறகு அந்த பக்கம் செல்லலாம் என இருந்தேன்.

திடீரென தான் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க திருச்செல்வம் என்னிடம் பேசினார், அவர் இயக்கிய கோலங்கள் சீரியல் பெரிய அளவில் வெற்றி பெற்றது எனக்கு தெரியும்.அதனாலேயே அவருடைய சீரியலில் நடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனாலும் அவர் என்னிடம் 3 மணி நேரம் தொடர்ந்து கதையை சொன்னார்.


அந்த கதையை கேட்டு தான் உறுதியாக இந்த சீரியலில் நடித்து தான் ஆக வேண்டும் என்று நினைத்ததாக அவர் பேசியுள்ளார். மேலும் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ள கிழக்கு வாசல் சீரியலிலும் தன்னை நடிக்க அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் குறி்பிடத்தக்கது  

Advertisement

Advertisement