• Sep 20 2024

இயக்குநர் முத்தம் கொடுத்ததற்கு இது மட்டும் தான் காரணம்- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சோப்ரா

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் ராஜ் தருண் ஹீரோவாக நடிக்க இயக்குநர் ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி இயக்கும் திரைப்படம்  ‘திரகபதர சாமி’. டோலிவுட் ரொமாண்டிக் காமெடி படமாக இப்படம் உருவாகி வருகிறது.தமிழ் திரைப்படங்களான ‘சண்டமாருதம் ’, ‘காவல்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை மன்னரா சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். 

நடிகை பிரியங்கா சோப்ராவின் அப்பா வழி உறவுக்காரப் பெண்ணான மன்னரா சோப்ரா தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில், ‘திரபாதர சாமி’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் AS ரவி குமார் சவுத்ரி நடிகை மன்னாராவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டார்.


இந்த முத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்தது இந்நிலையில் நடிகை மன்னாரா சோப்ரா ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து இது பற்றி பேசி இருக்கிறார்.

"அவர் முத்தம் கொடுத்தது நானும் எதிர்பார்க்காதது தான். அவர் excitementல் அப்படி செய்துவிட்டார். என்ன செய்கிறோம் என தெரியாமல் excitementல் சிலர் செய்துவிடுவார்கள். ஆனால் அவர் தவறான எண்ணத்தில் அப்படி செய்யவில்லை" என மன்னாரா சோப்ரா கூறி இருக்கிறார்.


மன்னாரா விளக்கம் கொடுத்து இருக்கும் வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. அதற்கு நடிகை ஷாக் ஆனலும் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் சிரித்து கொண்டு தான் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement