• Sep 20 2024

வித்யாசாகர் எனக்கு அளித்த பெறுமதியான பரிசு இது தான் - திருமண நாளில் ரகசியத்தைக் கூறிய மீனா- கடும் கவலையில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ் தெலு்கு கன்னடம் ஆகி மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் கடந்த 2009ல் வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் வித்யாசாகர் கடந்த சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். மேலும் நுரையீரல் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றியே உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு திரையலகப் பிரபலங்கள் பலரும் தமது இரங்கலைத் தெரிவித்து வந்தனர்.

மேலும் கடந்த 2009 ஜூலை 12ம் தேதி மீனா -வித்யாசாகர் திருமணம் நடைபெற்ற நிலையில், இன்னும் சில தினங்களில் இவர்களின் திருமண நாள் வருகிறது. இந்நிலையில் தற்போது வித்யாசாகர் உயிரிழந்துள்ளது மீனா மற்றும் நைனிகாவை மட்டுமில்லாமல் அவர்களது ரசிகர்களையும் கவலையடைய செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டில் மீனா தன்னுடைய திருமண நாளின்போது பதிவிட்ட பகிர்வை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

அதில் தங்களின் சிறப்பான புகைப்படத்தை பகிர்ந்த மீனா, வானவில் போல தன்னுடைய வாழ்க்கையில் வந்து அதை அழகாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.தொடர்ந்து வித்யாசாகர் தனக்கு புன்னகையை பரிசளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இவர்களது திருமண நாள் வருவதையொட்டி மீனா மட்டுமில்லாமல் ரசிகர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement