தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற 'திருச்சிற்றம்பலம்' படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்த வண்ணமே இருக்கின்றனர்.
இப்படம் முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை தனுஷ் திரை வாழ்க்கையில் கண்டிராக வசூலை குவித்தது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு இரு இடங்களிலும் வாத்தி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. அத்தோடு இப்படத்தின் மூலம் மாபெரும் லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கோலிவுட் மற்றும் டோலிவுட் இரன்டு இடங்களிலும் வாத்தி படத்தினுடைய வெற்றி தான் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமே தனுஷ் புது வீட்டிற்கு சென்றுள்ள அதிர்ஷ்டம் தான் எனக் கூறி வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் போயஸ் கார்டனில் ரூ. 150 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான வீட்டில் தனுஷ் குடி புகுந்தமை நம் அனைவருக்கும் தெரியும். இந்த வீட்டினுடைய அதிர்ஷ்டம் தான் வாத்தி படத்தினுடைய மாபெரும் வெற்றி எனவும் கூறி வருகிறார்கள்.
Listen News!