• Sep 20 2024

நயன்தாரா மார்க்கெட்டை இழப்பதற்கு இது தான் காரணம்- கடுமையாக விமர்சித்த பிரபலம்- ஒருவேளை உண்மையாக இருக்குமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது விடா முயற்சியினால் முன்னிலையில் உள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததோடு இரண்டு குழந்தைகளையும் வாடகைத் தாய் முறை மூலம் பெற்றெடுத்துள்ளார்.

இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும்  உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தைவக் என் சிவன் என பெயர் சூட்டினார்கள்.இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளரான அந்தணனிடம், நிருபர் “நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு அவரது திரைப்படங்களுக்கான அப்டேட் வரவில்லையே?” என கேட்டிருந்தார்.


அதற்கு பதிலளித்த அந்தணன் “நயன்தாரா தனக்கு மார்க்கெட் வேல்யூ அதிகமாக இருப்பதால் கம்மி பட்ஜெட்டில் படம் எடுத்து அதனை ஓடிடியில் அதிகமாக விற்றுவிடலாம் என நினைக்கிறார். நயன்தாரா கனெக்ட் என்று ஒரு திரைப்படத்தை தயாரித்து நடித்தார். ஒரு வேளை அறம் மாதிரியான ஒரு திரைப்படத்தை தயாரித்து ரசிகர்களை பிரம்மிக்க வைத்திருந்தால் நயன்தாராவின் மார்க்கெட்டை நயன்தாரா நினைத்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது.

நயன்தாரா என்ன செய்கிறார் என்றால், கம்மெர்சியலாக ஒரு விஷயம் செய்து எப்படியாவது தனது பாக்கெட்டை நிரப்பினால் போதும் என்று நினைக்கிறார். அங்குதான் இயற்கை அவருக்கு தண்டனை கொடுக்கிறது. இந்த சினிமாதானே உங்களை வளர்த்துவிட்டது. அதே சினிமாவை தாங்கள் தவறாக பயன்படுத்தும்போது உங்களுடைய மார்க்கெட் கீழே இறங்குகிறது. இந்த தவறை அவர் செய்ததுதான் அவரது மார்க்கெட்டின் பின்னடைவிற்கு காரணம்” என கூறியிருந்தார்.


நயன்தாரா தற்போது ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement