இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் அஞ்சான்.இத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். மேலும் சூரி, வித்யூத் ஜம்வால்,மனோஜ் பாஜ்பாய் ஆகியோரும் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று தமிழகத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் தற்போது அஞ்சான் படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து இயக்குநர் லிங்குசாமி பற்றி பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.
அதாவது "அஞ்சான் திரைப்படம் கேரளாவில் மாபெரும் வெற்றி அடைந்தது. அதேபோல் ஹிந்தியிலும் சூப்பர்ஹிட். யூடியூபில் அதிகமாக பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் அஞ்சான் படமும் ஒன்று. அப்படத்தின் தோல்விக்கு நான் கூட காரணமாக இருக்கலாம். திரைக்கதை கூட காரணம் தான். பல கதைகள் இப்படத்திற்காக மாறியது,
எனக்கு ஒரு கதை நிலையாக நின்றால் தான் பிடிக்கும்.அதுவும் ஒரு இப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் அப்படம் பிடிக்காத காரணத்தால் ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்களுக்கு ஒரு படம் மிகவும் பிடித்திருந்தால் அப்படத்தை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு இருக்கையில் வருகின்ற ஜூலை 15 லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் ,தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள தி வாரியார் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- சமந்தா கெட்டப்பில் அசத்தும் குக்வித்கோமாளி சிவாங்கி-வைரலாகும் புகைப்படம்..!
- கேப்பிரில்லாவை தொடர்ந்து ஆஜித்திற்கு குவியும் வாழ்த்துக்கள்-இது தான் விசயமா..? வைரலாகும் புகைப்படங்கள்..!
- ஜவான் படத்தில் நடிக்கும் விஜய்க்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
- நயன் – விக்கி திருமணத்தில் விஜய் சேதுபதி மனைவியா- வைரலாகும் புகைப்படம்..!
- பிரபு வீட்டில் வெடித்த சொத்து பிரச்சினை-உயர்நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு..!
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!