மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் ந்தி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் வுமன் சென்ட்ரிக் படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இது தவிர இவர் தற்பொழுது 2010ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த பையா திரைப்படத்தின் பாகம் இரண்டில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் ஜான்வி எப்போதும் சமூக வலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் படங்களை விட இன்ஸ்டாகிராமில் ஜான்வி வெளியிடும் போட்டோக்கள் தான் அதிகம் வைரலாகிறது. அதற்கு காரணம் அவர் எல்லைமீறிய கவர்ச்சி காட்டுவது தான்.தற்போது ஜான்வி அளித்து இருக்கும் பேட்டி ஒன்றில் அவருக்கு இருக்கும் ஒரு பழக்கம் பற்றி பேசி இருக்கிறார்.
காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவேன் என கூறி இருக்கிறார். அது தான் அவரது அழகின் ரகசியமாம்.இதனைக் கேட்ட ரசிகர்கள் இதுவரை தெரியாமல் போச்சே மேடம் என்றும் நல்ல டிப்ஸ் கூியதற்கு நன்றி என்றும் தெரிவித்து வருவதையும காணலாம்.
Listen News!