• Sep 20 2024

"நான் இப்படி சுத்திட்டு இருக்க காரணம் இது தான்".. சபாஷ் போட வைத்த ADK பதில்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் பைனல்  சுற்றுக்கு முன்னேறுவதற்கு முன்பாக பிக் பாஸ் வீட்டில் எலிமினேட் ஆகி இருந்தார் ADK. சிறந்த போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்த ஏடிகேவின் பாடல்களுக்கு பிரத்யேக ரசிகர்களே உள்ளனர். அத்தோடு பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சூழ்நிலைகள் குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் ஸ்பாட்டில் நிறைய பாடல்களை அவர் பாடி உள்ளார்.

அதே போல, சிறப்பாகவும் ஆடி வந்த ஏடிகே, Finale வாரத்திற்கு முன் வெளியேறி இருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தி இருந்தது.

எனினும் இதனையடுத்து, சில ட்வீட்களை செய்திருந்த ஏடிகே, லைவில் தோன்றி பிக் பாஸ் குறித்தும், அசிம், விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்கள் குறித்தும் நிறைய கருத்துக்களை பேசி இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில், சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த ADK, நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில் தனது பிக் பாஸ் அனுபவம் குறித்தும், விக்ரமன், அசிம் உள்ளிட்ட போட்டியாளர்கள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை ADK பகிர்ந்து கொண்டார். எனினும் அதே போல கமல்ஹாசன் அளித்த தொப்பி குறித்தும் நெகிழ்ச்சியாக சில கருத்துக்களை பேசி இருந்தார்.



முன்னதாக ஏடிகே வெளியேறுவதற்கு முந்தைய வாரத்தில் Sacrifice டாஸ்க் அரங்கேறி இருந்தது. அதன்படி, உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஏதாவது தியாகங்களை செய்ய வேண்டும் என்பது தான் அது. அத்தோடு அதில், ஏடிகேவின் முன்பக்கத்தில் கொஞ்சம் முடியை மட்டும் வைத்து கொண்டு மற்ற முடியை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட, தலையின் முன் பக்கம் மட்டும் முடியுடன் இருந்தார் ஏடிகே. அவர் எலிமினேட் ஆன போதும் கூட அதே தலையுடன் தான் வெளியேறி இருந்தார்.

இதன் பின்னர், அவரிடம் பேசிய கமல்ஹாசன், இப்படியே வெளியே உங்களை அனுப்ப மனம் வரவில்லை எனக்கூறி, KH என குறிப்பிடப்பட்ட தொப்பி ஒன்றை ஏடிகேவிற்கு அவர் பரிசளித்திருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ADK, அதே தலையுடன் தான் வலம் வருகிறார்.



கமல்ஹாசன் கொடுத்த தொப்பியைக் குறிப்பிட்டு பேசிய ஏடிகே, "கமல்ஹாசன் அப்படிங்குற இந்த பிராண்டிங் வந்து வாழ்க்கை பூரா என் கையில இருக்கும். அத்தோடு அவர் சின்ன வயசுல இருந்தே நமக்கு தெரியும் இல்லையா. இந்த முடியை நான் Sacrifice பண்ணிட்டு மீதம் இருக்குற முடியை எடுக்காம இருக்குற ஒரே காரணத்துக்காக தான் எனக்கு இது கிடைச்சது. அதுனால இந்த இந்த கேப் கிடைக்கிறதுக்கு இந்த முடி எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கு.

அதனாலதான் இந்த முடியோட சுத்திட்டு இருக்கேன். இப்ப நான் வெளியே வந்து இந்த முடிய எடுத்திருந்தேன்னா, கொடுத்தவங்கள அவமானபடுத்துற மாதிரி போயிடும். அதனால இந்த முடியை எடுக்கல. மேலும் இந்த கேப்பை கொஞ்ச நாள்ல பிரேம் பண்ணி வைக்க போறேன், போட மாட்டேன். இத கொடுத்ததுக்காக கமல் சாருக்கு மிகப்பெரிய நன்றி" என உணர்ச்சி பொங்க ஏடிகே பேசி உள்ளார்.

Advertisement

Advertisement