• Sep 21 2024

'10 வருடங்களாக காதலித்தாலும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இது தான் காரணம்'- நடிகை ப்ரியா பவானி ஷங்கர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமது கடின உழைப்பினால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குச் சென்று கலக்கி வரும் பிரபலங்கள் பலர் காணப்படுகின்றனர். அவர்களின் லிஸ்டில் தமிழ் சினிமாவில் இப்போது கலக்கி வரும் நாயகி தான் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.

இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். இதன் பின்பு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததால் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் முன்னணி நாயகியாக நடித்தார். அந்த சீரியல் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அடுத்து பட வாய்ப்பு கிடைத்தது.

அதன் படி மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்பொழுது விஷால், ஜெயம் ரவி, அருண் விஜய், ஹரிஸ் கல்யாண், எஸ். ஜே சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து விட்டார்.

இவருக்கு ராஜவேல் என்ற காதலர் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் இப்போது தான் வெளியாகி வருகிறது.

10 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் ஏன் திருமணம் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. அதற்கு நடிகை ப்ரியா, படித்து முடித்துவிட்டு திருமணம் என இருந்தேன், பின் வேலைகள் கிடைத்தது. சீரியலுக்கு பிறகு திருமணம் என நினைத்தால் பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது. எனவே தான் எனது திருமணம் தள்ளிக்கொண்டே செல்கிறது என கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement