4 அண்ணன் தம்பிகள் இடையே இருக்கும் பாசம், பிரச்சனைகள், குடும்ப சண்டைகள் என பல விஷயங்களை கொண்டு நகரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கப்படும் இந்த சீரியல் தற்போது 1000 எபிசோட்டுக்களை கடந்துள்ளது.இவ்வாறு இருக்கையில் இதில் முல்லையாக நடிக்கும் காவியா அறிவுமணி இத் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் முல்லை கதாப்பாத்திரம் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக காட்டப்படும் நிலையில் அவரின் இடத்திற்கு யார் வருவார்..? எதனால் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது இவருக்கு சீரியல் நடிக்கும் போதே இரண்டு படங்களில் கெமிட்டாகி விட்டாராம்.அதனால் தான் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாராம்.அத்தோடு இதில் நடித்துக்கொண்டு சீரியலில் நடிக்க முடியாதாம்.தற்போது முல்லை கதாப்பாத்திரத்திற்கு மூன்றாவது முறையாக ஒரு நடிகை வந்து நடிக்கப்போகின்றாராம்.
இவ்வாறுஇருக்கையில் நடிகை மறைந்த நடிகை சித்திராவின் நண்பியை கேட்டதாம்.அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டாராம்.ஏன் என்றால் அவர் கதாநாயகியாக மட்டுமே நடிப்பதாக கூறியுள்ளாராம்.பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் யார் முல்லையாக நடிக்கப்போகிறார் என்று.
Listen News!