• Sep 20 2024

என்னுடைய படம் தோல்வியைச் சந்திப்பதற்கு இது தான் காரணம்-மனம் நொந்து பேசிய நடிகர் பரத்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் பரத். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய பழனி, வெய்யில் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய லவ் என்னும் திரைப்படம் வெளியாகியது. இப்படத்தில் பரத்துடன்  வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரத் தனது கேரியர் குறித்து மனம் திறந்துள்ளார். 


"தனது தோல்விக்கு நான் மட்டுமே காரணம்" என வெளிப்படையாகக் கூறியுள்ளார். முக்கியமாக நேபாளி படத்தில் நிறைய படுக்கையறை காட்சிகள் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் அந்தப் படம் A சான்றிதழுடன் வெளியானது. அதன் காரணமாக ஃபேமிலி ஆடியன்ஸ் யாரும் நேபாளி படம் பார்க்க தியேட்டருக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார். 

அதேநேரம் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படம் வெளியாகியிருந்தது. ஃபேமிலி சென்டிமெண்ட் படமான சந்தோஷ் சுப்ரமணியம், ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனால் நேபாளி படம் தோல்வியடைந்ததோடு, அதிலிருந்து தனது கேரியரும் சரியத் தொடங்கியதாக புலம்பித் தள்ளியுள்ளார். 

ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படம் 2008ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியானது. அதே தேதியில் தான் பரத்தின் நேபாளி திரைப்படமும் வெளியானது . சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் அறிமுகமான பரத், 50 படங்கள் நடித்தும் முன்னணி ஹீரோவாக முடியாமல் திணறுவது இதனால் தானா என ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.


இந்நிலையில் விரைவில் இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் பரத். இந்தப் படம் நிச்சயம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


Advertisement

Advertisement