• Sep 20 2024

நஸ்ரியா திரும்பவும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமாம்.. அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி அட்லி இயக்கத்தில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகமானவர் நடிகை நஸ்ரியா.

தொடர்ந்து நேரம், நையாண்டி,திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்களில் நடித்து முன்னணி நாயகியாக தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் கலக்கி வந்தார்.

பின்னர் ஓரிரு படங்களில் நடித்து சினிமாவிற்கு முழுக்கு போட்டு சினிமாவிற்கு வந்த இவர் சில ஆண்டில் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி விட்டார்.

ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த ட்ரான்ஸ் எனும் திரைப்படத்தில் கணவருடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது நானி நடிப்பில் வெளிவந்துள்ள அடடே சுந்தரா படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், '' நானி உடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. காதல் கதை என்றாலே தமிழக ரசிகர்கள் ஆதரவு அளிப்பர். அடடே சுந்தராவுக்கும் ஆதரவு தர வேண்டும். என் கணவர் பகத்பாசில் தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்றார். நிறைய கதைகளை கேட்டேன். இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன் ". என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement