விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ரித்திகா.
மேலும் இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பின்னர் இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.அத்தோடு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.
அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின்னர் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.
அத்தோடு இவர் நடித்து வரும் பாக்கியலட்சுமி தொடரில் இவருக்கு மகளாக நிலா என்ற கதாபாத்திரத்தில் குழந்தை ஒன்று நடித்து வருகிறது.இந்த குழந்தையுடன் இவர் அடிக்கடி வீடியோ எடுத்து வெளியிடுவது வழக்கம்.மேலும் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. எனினும் தற்போது நிலா பாப்பா அழகாக அ ஆ இ ஈ சொல்லியுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து ரித்திகா தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அத்தோடு குழந்தையின் திறமையை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
Listen News!