• Sep 21 2024

ஆத்தங்கரை மரமே பாடலில் வந்த பேச்சியம்மாவா இது….அடடடே..எப்படி இருக்கிறாங்க தெரியுமா; இதோ புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 1991-இல் பாராதி ராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை ருத்ரா. இப்படத்தில் இடம்பெற்ற கருத்த மச்சான் என்கின்ற பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது.

அந்தவகையில் தமிழ் சினிமாவின் முதல் படத்தின் முதல் பாடலிலேயே பிரபலமானார். இதைத்தொடர்ந்து நடிகை ராதிகாவின் நடிப்பில் வெளிவந்த கிழக்கு சீமையிலே படத்தில் இவர் பேச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இன்னும் சொல்லப்போனால் ஆத்தங்கரை மரமே அரசமர இலையே என்ற பாடலின் மூலம் கொடிகட்டி பறந்தவர்.

இவர் தமிழ் சினிமா மட்டுமன்றி மலையாளத்திலும் கொடி கட்டி பறந்தவர் நடிகை ருத்ரா.இவருக்கு மலையாள மொழியில் அறிமுகம் தேவையில்லை. அந்த அளவிற்கு மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் சிறந்த டான்ஸராகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை ருத்ராவின் புகைப்படத்தை கேரளாவை சேர்ந்த அவரது ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது நடிகை ருத்ராவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம். அதில் அவர் கூறியிருப்பது உங்களுடைய நடிப்பில் 1993ஆம் ஆண்டு வெளிவந்த "மணிச்சித்திரதாழு" படம் சூப்பர் ஹிட்டானது.

இந்த திரைப்படத்தில் இருந்து நான் உங்களின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன் இந்த படத்தில் நீங்கள் சொல்லி இருக்கிற டாய்லெட் எல்லாம் வேற லெவல், என்று கூறி இருந்தார் இந்த புகைப்படம் விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் பட வாய்ப்புகள் குறைய சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார்.

மிகப் பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் நடித்துள்ளார், மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான மக ராசி சீரியலில் நடித்துள்ளார். இந்த வயதிலும் ஸ்லிம்மாக அதே அழகுடன் இருந்து வருகின்றார்.இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement