பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் தான் வாரிசு .வம்சியின் இயக்கத்தில் தமனின் இசையில் விஜய் நடிப்பில் உருவான இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்திருந்தார்.
செண்டிமெண்ட் நிறைந்த குடும்ப படமாக வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.
குறிப்பாக இப்படம் சீரியலை போல இருப்பதாகவும், படத்தில் எந்த வித புதுமையும் இல்லை என்பதும் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கின்றது.இருப்பினும் வசூல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றார்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலாக எதிர்பார்ப்பது காத்துக்கொண்டிருக்கின்றனர்.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. விஜய், த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இப்படத்தின் கதையை பற்றி பேசியுள்ளார். அதாவது, இப்படத்தில் விஜய் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆளாகா நடிக்கிறாராம். மேலும் ஒரு ஹோட்டலை நடத்தி வரும் விஜய்க்கு பிக் பாஸ் ஜனனி மகளாக நடிக்கிறாராம்.
ஒரு நாள் அந்த ஹோட்டலுக்கு வரும் கஸ்டமரால் விஜய்யின் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், அதன் பிறகு தான் விஜய் ஒரு கேங்ஸ்டர் என தெரியவருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை.மேலும் இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!