• Sep 21 2024

வார விடுமுறையில் அஞ்சலி செய்த விஷயம்... அட இப்படியுமா பொழுதைக் கழிப்பாங்க...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'கற்றது தமிழ்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவரே நடிகை அஞ்சலி. இப்படத்தில் இவர் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இதற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் வென்றிருக்கின்றார். அத்தோடும் மேலும் பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.



அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'அங்காடி தெரு' படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதில் அஞ்சலியின் நடிப்பை பலரும் பாராட்டினர். நடிகை அஞ்சலி தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது தற்போது சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் தமிழ், தெலுங்கு , ஹிந்தியில் உருவாகவுள்ள படத்திலும் அஞ்சலி கமிட் ஆகியுள்ளார். அஞ்சலியை பொறுத்தவரையில் படங்களில் மட்டும்மல்லாது சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். 



அதில் தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது  தனது வார விடுறையை கழிக்கும் வகையில் கடலிற்கு சென்றிருக்கின்றார். அங்கு கப்பல் ஒன்றினை செலுத்துவதோடு அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement