தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் நானி. இவர் தெலுங்கு திரையுலகை தாண்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ, கேங் லீடர், ஜெர்ஸி உள்ளிட்ட இவரது திரைப்படங்கள் தமிழிலும் ஹிட்டடித்தது.
மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.எனினும் இதனை தொடர்ந்து தற்போது இவர் நஸ்ரியாவுடன் இணைந்து அண்டே சுந்தரானிகி என்ற படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் ஜூன் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் பேசிய நானி “சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்தபோது என்னுடைய திரை பயணத்திலும் இப்படி ஒரு படம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இது போன்ற கதைகளை தெலுங்கிலும் சொல்ல விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Listen News!