தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருப்பதோடு ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்த நடிகையாகவும் வலம் வருகின்றார்.
தற்போது சமந்தா தெலுங்கில் சிவ நிர்வாண இயக்கத்தில் விஜய தேவர கொண்டாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் சமந்தாவின் கதிஜா கதாபாத்திரம் தான் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் இப்படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார் சமந்தா. அத்தோடு தெலுங்கு படப்பிடிப்புக்காக நான் காஷ்மீரில் இருப்பதால் தன்னால் காத்துவாக்குல ரெண்டு காதல் பட குழுவினருடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்ல முடியாமல் போனது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்:
- திடீரென கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய கேஜிஎப் இயக்குநர் -அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள்..!
- ‘நடிப்பு என்பது சலிப்பான விடயம் என்று தவறாக நினைத்திருந்தேன்’- அனுபவத்தைப் பகிர்ந்த செல்வராகவன்
- முதன் முறையாக டேட்டிங் சென்ற சினேகா- பிரசன்னா ஜோடி-வைரலாகும் புகைப்படம்..!
- எனக்கு திருமணமா-முதன் முறையாக உண்மையை கூறிய சாய்பல்லவி..!
- அக்காவுக்கு இணையாக ரசிகர்களைக் கவரும் வகையில் போட்டோஷுட் நடத்திய யாஷிகாவின் தங்கை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!