தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வந்த இவருக்கு தற்போது தமிழில் அந்த அளவுக்கு மவுசு இல்லை.
இதனால் உஷாராக பாலிவுட் பக்கம் சென்ற தமன்னா, அங்கு அடுத்தடுத்து படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்த வண்ணம் உள்ளார்.இவர் தமிழில் இறுதியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித், விஜய் போன்ற நடிகர்களுடன் கேட்க விரும்பும் கேள்விகள் குறித்து பேசியுள்ளார்.விஜய்யிடம் தளபதி 68 படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்பேன், அஜித்திடம் வீரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் சமைத்து கொடுத்த மிருதுவான இட்லியை கேட்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் பைக் ரைட் கூட்டி சொல்லி கேட்பேன்.
சூர்யாவிடம் கங்குவா படத்தின் கதை என்ன என்று கேட்பேன், தனுஷை மும்பை வந்தால் போன் பண்ண சொல்லுவேன், ஆனால் அவர் இதுவரை போன் பண்ணதில்லை. எனவே திரும்பவும் அதையே தான் கேட்பேன் என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!