விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்ககளுக்கு பஞ்சமே இல்லை என்று தான் கூற வேண்டும்.அந்தவகையில் கடந்த இரண்டு சீசன்களாக ரசிகர்களிடத்தே வெற்றிகண்ட நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி.தற்போது மூன்றாவது சீசனும் ஆரம்பமாகி செம ஹிட்டாக நிறைவடைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் காரணமே. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாகவும் உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது நிகழ்ச்சியின் நடுவர், தொகுப்பாளர் தான்.
அத்தோடு வழக்கம் போல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ராகுல் தாத்தா, வித்யூலேகா, ரோஷினி, ஸ்ருதிகா, அம்மு அபிராமி, தர்சன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.
அதேபோல் கோமாளியாக சிவாங்கி, புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. இந்த முறை நிகழ்ச்சியில் பல வித்தியாசமான கான்செப்ட்களை கொண்டு வந்து இருந்தார்கள்.
இவ்வாறு இருக்கையில் இறுதியில் வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்சன், அம்மு அபிராமி, சந்தோஷ், கிரேஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். சமீபத்தில் கோலகலமாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைந்தது. 4 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில் ஸ்ருத்திகா டைட்டில் வின்னர் ஆனார். மேலும், வெற்றி பெற்ற ஸ்ருத்திகாவுக்கு பரிசு தொகை 5 லட்சம் ரூபாயும், ஒரு லட்சம் ரூபாய்க்கு ப்ரீத்தியின் வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக கொடுக்கப்பட்டது. கோமாளியாக இருந்த புகழுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
அத்தோடு பலரும் ஸ்ருதிக்கா வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் தாத்தா ஒரு பேட்டியின் போது நிகழ்ச்சி குறித்து அவர் கூறி இருந்தது சர்ச்சையானது. அதாவது, முதல் நாளே அடுத்த நாள் என்ன சமைக்க வேண்டுமென்று அனுப்பி விடுவார்கள் என்று கூறியிருந்தார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறுஇருக்கையில் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்த ஸ்ருதி அப்பிடி இல்லை.அப்படி குடுத்தால் எப்பிடி விளைாயட முடியும்.அவர்கள் ஒரு விடயத்தை தருவார்கள் அதை நாங்கள் தான் சிந்தித்து செய்ய வேண்டும்.இல்லாவிடில் நாங்களேன் அப்படி டென்சனாக இருக்கப்போறோம்.நாங்கள் தான் டிஸ்ஸை எப்பிடி செய்ய வேண்டும் என்று யோசித்து செய்ய வேண்டும்.அத்தோடு சூட் இல்லாத நாளும் நாங்கள் இதற்காக பயிற்சி மேற்கொள்ளுவோம் என தெரிவித்துள்ளார்.இந்த வியடம் தற்போது வைரலாகி வருகின்றது.
பிற செய்திகள்
- என்னை யாரும் அப்படி யாரும் அழைக்காதீங்க- பெயரை மாற்றிய அஜித் பட நடிகை..!
- இயக்குநர் சுந்தர்.சியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
- குடிபோதையில் உளறி கொட்டிய விஜய் தேவர் கொண்டா – ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு..!
- ஈஸ்வரி எடுத்த முடிவு -கதறி அழும் இனியா…இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- விக்னேஷ் சிவன் விளக்கத்தால் மக்களுக்கு தெரிய வந்த உண்மை- சர்ச்சையில் சிக்கிய தெருக்குரல் அறிவு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!