தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் வாரிசு. இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்தினை தில் ராஜு என்பவர் தயாரிக்கின்றார்.ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த இரு பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து மூன்றாவது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் வருகிற 24ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த திலிப் சுப்ராயன் வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து பேசியுள்ளார்.
வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பயங்கரமாக இருப்பதாகவும் செம மாஸ் காட்சி வந்திருக்கு என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். திலிப் சுப்ராயன் இப்படி கூறியுள்ளது படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
மேலும் நடிகர் விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முதல் ரசிகர்களை சந்தித்ததோடு அவர்களுக்கு பிரியாணி சமைத்தும் விருந்து வைத்தார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!