• Sep 21 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து இது தான் நடக்கப் போகுது- முல்லை அளித்த சுவாரஸியமான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் யாரும்எதிர்பார்க்காத விதமாக ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் பிரிந்து விட்டனர். அதிலும் ஜீவா வீட்டை விட் டு வௌயேறியது அனைவரும் எதிர்பார்த்த விடயம் தான்.

ஆனால் இதையே சாட்டாக வைத்து ஐஸ்வர்யாவும் கண்ணனைக் கூட்டிக் கொண்டு கிளம்பியது தான் யாராலும் எதிர்பார்க்காத விடயமாக இருக்கின்றது.இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


இந்த நிலையில் இந்த சீரியலில் தற்பொழுது முல்லையாக நடித்து வரும் லாவான்யா அண்மையில் ஒரு் பேட்டியளித்திருந்தார்.அதில் ஜீவா மாமா பண்ணினதும் தப்பு இல்ல. ஐஸ்வர்யா செய்ததும் தப்பு இல்லை. இரண்டு பேரும் அவங்க பக்கம் இருக்கி நியாயத்தை தான் பண்ணிருக்கிறாங்க. அது தப்பு என்று எப்பிடி சொல்ல முடியும்.

இந்த சீரியலில் மீனா காரக்டர் ஆரம்பத்தில இருந்து துருதுருனு இருப்பாங்க. ஆனால் மொய் வியஷத்தில முல்லை இப்படி பண்ணிட்டாங்களே,அவங்களால தான் குடும்பம் பிரிஞ்சிட்டு என்று சொல்லுறாங்க, எங்க போனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி தான் கேட்கிறாங்க அடுத்து என்ன நடக்கும் என்று தான் கேட்கிறாங்க,


நான் இந்த சீரியலில் நடிக்க ஓகே சொன்னதற்கு காரணம் முல்லை என்ற கதாப்பாத்திரம் தான்.இனி தான் சீரியலில் அதிக திருப்பங்கள் இருக்கும் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement