• Sep 20 2024

என்னது ராஷ்மிகாவிற்கு அந்த விஷயத்தில ராசி இல்லையா...? அதற்கான காரணம் இந்த நபர் தானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் அழகிற்கும், க்யூட்டான சிரிப்பிற்கும், குழந்தைத்தனமான நடிப்பிற்கும் மயங்காத இளைஞர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. அதுமட்டுமல்லாது பட வாய்ப்புக்களும் இவருக்கு வந்து குவிந்த வண்ணமே இருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.


அந்தவகையில் இவர் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை', சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து 'மிஷன் மஜ்னு' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரு படங்களினதும் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் வெளியாக காத்திருக்கிறது. 

அதுமட்டுமல்லாது தற்போது ரன்வீர் சிங்குடன் இணைந்து 'அனிமல்' எனும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக டைகர் ஷெராஃப்புடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவிருந்தார் ராஷ்மிகா. அத்தோடு இப்படத்தை கரண் ஜோகர் தயாரிப்பதாகவும் இருந்தது.


இந்நிலையில் இப்படத்தின் உடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நடிகை ராஷ்மிகாவிற்கு இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதாவது தொடர் ஹிந்தி படங்களின் தோல்வி காரணமாக இப்படத்தை கரண் ஜோகர் ட்ராப் செய்துவிட்டாராம். மேலும் பட்ஜெட் அதிகம் என்ற ஒரே காரணத்தினால் தான் இப்படத்தை கரண் ஜோகர் நிறுத்தி விட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட பல பாலிவுட் இணையத் தளங்கள், மற்றும் சமூக வலைத்தள வாசிகள் எனப் பலரும் "ராஷ்மிகாவிற்கு ராசி இல்லை" எனக் கூறி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement