• Sep 20 2024

இந்த கதை என் மனதில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது- NTR 31 பற்றி மனம்திறந்த கேஜிஎஃப் இயக்குநர்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிரமாண்ட இயக்குநரான ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஆர்ஆர் ஆர். மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகிய இத்திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக மார்ச் 25 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் உலகளவில் இந்த படம் திரையரங்குகளின் மூலம் வசூலாக 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதையடுத்து இந்த படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான ஜூனியர் NTR-ன் அடுத்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று NTR ன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் NTR 31 படத்தின் முதல் லுக் போஸ்டரை பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது.

மேலும் படத்தைப் பற்றி பேசியுள்ள பிரசாந்த் “இந்த கதை என் மனதில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. ஆனால் அப்போது அதன் பிரம்மாண்டத்தை எண்ணி பயந்தேன். ஆனால் இப்போது என்னுடைய கனவு படைப்பை கனவு நாயகனோடு உருவாக்குவதற்கான காலம் அமைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement