ஆச்சி மனோரமா ஒரு மூத்த திரைப்பட தமிழ் நடிகை ஆவார. அவர் 1500 க்கும் மேற்பட்ட படங்கள், 1000 மேடை நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அவர் நாடகக் கலைஞராக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
சினிமா துறையில் தனது ஆரம்ப நாட்களில், நகைச்சுவையில் அதிக கவனம் செலுத்தினார். நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் அவருக்கு சமமான சவாலான பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் நாட்டிய பேரொளி பத்மினி போன்ற சிறந்த பிரமுகர்கள் இருந்தபோதும் அவரது பாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது மற்றும் கவனிக்கப்பட்டது. அப்போதிருந்து, நகைச்சுவைக்கு கூடுதலாக மாறுபட்ட பாத்திரங்களில் அவருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது.
தென்னிந்தியாவின் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. இவர் பல படங்களில் நடித்து தனது சினிமா திரையுலகில் நடிகை நச்சத்திரமாக திகழ்ந்தார்.
ஆச்சி என்றும் அழைக்கப்படும் அவரது மேடைப் பெயரான மனோரமாவால் நன்கு அறியப்பட்டவர், ஒரு முன்னாள் இந்திய நடிகை, பின்னணிப் பாடகி மற்றும் நகைச்சுவை நடிகை என பலவாறு கொண்டாடப்பட்ட இவர் 2015 ஒக்டோபர் 10 திகதி அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழந்தார்.
இப்படி பட்ட நடிகையின் நினைவு நாள் இன்று அவரை மறக்காமல் திரையுலக நச்சத்திரங்கள் பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
Listen News!